அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுவர் 63ஆம் பிரிவு பல நாட்களாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விசேட வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் குறித்த வார்ட் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி,குறித்த வார்டில் பணியாற்றிய மூன்று சிறப்பு மருத்துவர்களில் இருவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதோடு மற்றைய வைத்தியரும் கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளதாககவும் இதனால் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுவர் பகுதியான 63ஆம் பிரிவு மூடப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த பகுதியில் புதிதாக நியமிக்க வைத்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் இல்லாத காரணத்தினால் பிரிவில் தங்கியிருந்து நோயாளர்களை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பேராசிரியர் பிரிவில் உள்ள இரண்டு சிறுவர் பகுதிகளுக்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுவர் பகுதியான 63வது பிரிவு , ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் ஒரு பிரிவாக்கவுள்ளதாகவும் இது மூடப்பட்டதன் பின்னர் மாணவர்களுக்கு பயிற்சி தொடர்பான பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.