மதம் மற்றும் உடை மூலம் அதிகாரத்தை பெற அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிகளை தாம் அங்கீகரிக்கப் போவதில்லை என நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்தின் ஸ்தாபகர் வணக்கத்திற்குரிய வடுரகும்புரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும், பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த கலாசாரத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவினுடைய கருத்து தெரிவிக்குமாறு பல தடவைகள் அறிவித்திருந்ததாகவும் வணக்கத்திற்குரிய வட்டுரகும்புரே தம்மரதன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.