சந்தையில் தற்போது கோழி இறைச்சியினுடைய விலையானது 260 ரூபாயினால் அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றார்கள்.
இதன்படி, எதிர்வரும் தினங்களில் பண்டிகைக் காலம் மற்றும் வார இறுதிக் காலம் என்பதினால் கோழி இறைச்சியினுடைய விலையானது அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் ஏற்கனவே நட்டத்தினை சந்தித்து கொண்டிருப்பதாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தினுடைய தலைவரான அஜித் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.