மக்களின் எதிர்ப்பை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொண்டு வர முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இதன்படி, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலம் தொடர்பான விசேட கூட்டம் இன்று பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பயங்கரவாதத் தடைச் சட்டமூலத்தை கொண்டு வருவதன் மூலம் தொழிற்சங்க நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படும் சாத்தியம் காணப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களுக்கு அறிவித்து உத்தேச சட்டமூலத்தை தோற்கடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.