
நூருள் ஹுதா உமர்
அம்பாறை நகருக்கு அண்மையில் அமைந்துள்ள இறக்காமம் – வரிப்பதான்சேனையில் அமைந்துள்ள சலாமத் ஹோட்டலில் 8 பேர் கொண்ட குழுவினரால் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, நேற்று இரவு ஹிங்குரானை பகுதியினைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினராலேயே குறித்த உணவகத்திலுள்ள உள்ள விலை மதிப்பு மிக்க பொருட்கள் தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், இதனை தடுத்து நிறுத்த முயன்ற உணவகத்தின் உரிமையாளரிடமும் தாக்குதலுக்கு வந்திருந்த நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உரிமையாளரையும் தாக்கியுள்ளதோடு உரிமையாளர் உட்பட தாக்கப்பட்ட குழுவைச் சேர்ந்த இரண்டு நபர்களும் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, இம் முரண்பாட்டிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.