தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய தீர்வை வழங்காத காரணத்தினால் தாம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்கப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக நீர்வழங்கல் சங்கங்களின் ஒன்றிணைந்த ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மேலும், இதற்கமைவாக நீர் பணியாளர்கள் அலுவலக சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை நடவடிக்கைகளில் இருந்து வெளியேறவுள்ளதாக நீர்வழங்கல் சங்கங்களின் ஒன்றிணைந்த ஒன்றியத்தின் இணை அழைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.