இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய போது அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டினை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, அஜித் நிவார்ட் கப்ராலின் சட்டத்தரணிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகளை ஏற்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல இந்தத் தீர்மானத்தை வழங்கியுள்ளார்.
அத்தோடு, தீர்ப்பை அறிவித்த மாஜிஸ்திரேட், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றஞ்சாட்டுவதற்கு போதுமான உண்மைகளை முன்வைக்க வாதி தவறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளதோடு குறித்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
மேலும், தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் இந்த தனிப்பட்ட முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு 2006 மற்றும் 2015 க்கு இடையில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பணியாற்றிய போது சர்வதேச இறையாண்மை பத்திரங்களுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியமை மற்றும் அமைச்சர்கள் சபையின் அனுமதியின்றி அமெரிக்கா உளவாளியான இமாட் சுபேரிக்கு பணம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து இந்த தனிப்பட்ட முறைப்பாடு முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்தது.