பயங்கரவாத தடைச்சட்டம் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி, புதிய வரைவு மூலம் ஜனாதிபதியையோ அரசாங்கத்தையோ பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான சிவில் அமைப்புக்கள் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச சட்டங்களை ஆராய்ந்து மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு, தற்போதுள்ள சட்ட மீறல்களை அகற்றி கைது வாரண்ட் பிறப்பித்து, சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் அதிகாரத்தை வழங்கும் வகையில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்தோடு, குறித்த சட்டமூலத்திற்கு சர்வதேச ரீதியில் எவ்வித எதிர்ப்பும் இல்லை எனவும், புதிய சட்டமூலமொன்றை தயாரிக்குமாறும் அல்லது தற்போதுள்ள சட்டமூலத்தில் திருத்தங்களை கொண்டு வருமாறும் சர்வதேச ரீதியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதற்கமையவே புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டதாகவும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.