முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, பிரதிவாதிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனை தொடர்பான உத்தரவும் அன்றைய தினம் வெளியிடப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சதொச உள்நாட்டு வர்த்தக அலுவல்கள் மற்றும் கூட்டுறவு அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் சதொச ஊழியர் குழுவொன்றை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு, சதொச முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ, சதொச முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் காஜா மொஹிதீன் ஆகியோரும் குறித்த வழக்கில் பிரதிவாதிகள் ஆவார்கள்.