நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம் நாஸிம்
சம்மாந்துறை பிரதேசத்தில் 65 வயதுடைய மலையடி கிராமம் 4 கிராம சேவையாளர் பிரிவினையுடைய நபர் ஒருவர் மதஸ்தலம் ஒன்றினுடைய நிர்வாக தெரிவில் ஏற்பட்ட கைகலப்பின் காரணமாக நேற்று (7) மாலை அளவில் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதன்படி, சம்மாந்துறை பள்ளிவாசல் ஒன்றினுடைய நிர்வாக காலம் முடிந்த நிலையில் கூட்டத்திற்க்கு பங்குபற்றிய ஒரு சிலர் பெருநாள் முடிந்தவுடன் நிர்வாகத்தை தெரிவுசெய்யுமாறும், மற்றைய குழுவினர் ஓரிரு தினங்களுக்குள் நிர்வாகத்தினை தெரிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தியிருந்த நிலையில் எதிர்வருகின்ற ஞாயற்றுக்கிழமை நிர்வாகத்தை தெரிவு செய்ய முடிவு செய்து கலைந்து வெளியே வரும் போதே குறித்த மோதல் சம்பவம் இடம் பெற்றதாக தெரியவருகின்றது.
மேலும், சம்பவம் தொடர்வன மேலதிக விசாரணையினை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.