விவசாயிகளுக்கு இலஞ்சம் வழங்கும் வேலைத்திட்டத்தை விவசாய அமைச்சர் நுட்பமாக ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் தேர்தலை இலக்கு வைத்து அரசியல் நோக்கத்திற்காக விவசாயிகளை பயன்படுத்த அமைச்சர் இலஞ்சம் வழங்குவதாக அகில இலங்கை விவசாய சங்கத்தின் தலைவர் அனுராதா தென்னகோன் தெரிவித்துள்ளார்.