இந்தியப் பெருங்கடலில் உள்ள நிக்கோபார் தீவில் ரிக்டர் அளவுகோலில் 5.6 மற்றும் 5.5 என்ற அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
இதன்படி, குறித்த இரண்டு நிலநடுக்கங்களும் கடலில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அமெரிக்கா புவியியல் ஆராச்சி மையம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த இரண்டு நிலநடுக்கங்களால் சுனாமி அபாயம் ஏதும் இல்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.