பூச்சி கட்டுப்பாடு சட்டத்தில் உடனடியாக திருத்தம் செய்ய விவசாய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, நாட்டில் போலியான மற்றும் தரமற்ற பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை விற்பனை செய்யும் மோசடி காரணமாக இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பூச்சிக்கொல்லி பதிவாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்ததாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, தற்போதுள்ள சட்டங்களின்படி, தரமற்ற பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் விற்பனை தொடர்பாக விதிக்கப்படும் அபராதங்கள் குறித்த கடத்தல்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த போதுமானதாக இல்லை என விவசாய அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இதனையடுத்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தரமற்ற களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்பவர்களுக்கு குறைந்தது 15 இலட்சம் ரூபா நட்டஈடு மற்றும் மூன்று வருட சிறைத்தண்டனை அல்லது இரண்டும் கிடைக்கும் வகையில் பூச்சிக்கொல்லி கட்டுப்பாட்டு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென விவசாய அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
எனவே, பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளின் விலை அதிகரிப்பை விவசாயிகள் தாங்கிக்கொள்ள முடியாததால், அவற்றை 20 கிராம் பொதிகளில் சந்தைக்கு வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.