பல்கலைக்கழக விரிவுரைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தீர்மானத்தை வரவேற்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிக்க பரீட்சை திணைக்களம் தயாராக உள்ளதால், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை விரைவில் ஆரம்பிக்க பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தலையிடுமாறு கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
அத்தோடு, கடந்த ஒன்றரை மாதங்களில்பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு சங்கம் முன்வைத்த பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டதாக மேலும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் மேலும் ஏதேனும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க விரும்பினால், எதிர்காலத்தில் எந்த நாளிலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பில் அறிவித்துள்ளது.