விவசாய அமைச்சின் கீழ் விவசாயிகள் மற்றும் வனவிலங்கு மோதல்களை நிர்வகிப்பதற்கான அலகு ஒன்றை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் தற்போதுள்ள வனவிலங்குகளின் தொகையை ஒப்பிடும் போது, வனவிலங்குகளின் எண்ணிக்கை தாக்குப்பிடிக்க முடியாத வகையில் அதிகரித்துள்ளதால், விவசாய அமைச்சின் கீழ் கமநல – வனவிலங்கு மோதல் முகாமைத்துவ பிரிவொன்றை ஸ்தாபிக்க ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
அத்தோடு, வன விலங்குகளினால் ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விலங்கின உரிமைகள் பாதுகாப்பு அமைப்புக்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடலின் விளைவாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதுள்ள மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது நாட்டில் வனவிலங்குகளின் எண்ணிக்கை ஏற்கனவே அதிகரித்துள்ளதோடு
இதன் காரணமாக வன விலங்குகளால் பயிர்கள் சேதமடைவது ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் விலங்குகளாக எருமை, மயில், காட்டுப்பன்றி, குரங்கு என்பன குறிப்பிடப்பட்டுள்ளதோடு வன விலங்குகளால் ஏற்படும் சேதத்தால் நாடு இழக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் மதிப்பு 200-250 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விவசாய வனவிலங்கு மோதல்களை நிர்வகிப்பதற்கும், விவசாய நடவடிக்கைகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் விலங்குகளை பட்டியலில் இருந்து தற்காலிகமாக அகற்றுவதற்கும், விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்படி குழு முன்மொழிந்துள்ளதுடன் கூடுதலாக, பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்குத் தேவையான சட்ட விதிகளைப் புதுப்பிக்கவும், பெரிய பூச்சிகளின் சேதம் அதிகம் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் விலங்கு இறைச்சி விற்பனை மற்றும் நுகர்வுக்கான சட்டத் தடைகளைத் தளர்த்தவும்குறித்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நீண்ட கால, நடுத்தர கால மற்றும் குறுகிய கால அடிப்படையில் நடைமுறைப்படுத்த பல முன்மொழிவுகளை நிபுணர் குழு இவ் கலந்துரையாடலில் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.