புலம்பெயர்ந்தோர் பிரச்சனையை தீர்க்க இத்தாலி அரசு 6 மாதங்களுக்கு அவசர நிலையை அறிவித்துள்ளது.
இதன்படி, கடந்த சில நாட்களாக வட ஆபிரிக்காவில் இருந்து மத்தியதரைக் கடல் ஊடாக இத்தாலிக்கு வந்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு அவசரகால கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், அவசர நிலையை விதிப்பதன் மூலம் குடியேற்றப் பிரச்சனையை கட்டுப்படுத்த முடியாது என்றும், அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வலுவான தலையீடு தேவை என்றும் இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.