நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்லவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், சூரிய ஒளி அமைப்புகள், தொலைபேசிகள் மற்றும் பாகங்கள், தளபாடங்கள், துப்புரகருவிகள், காலணிகள், எழுதுபொருட்கள், சமையலறை உபகரணங்கள், படுக்கை விரிப்புகள், மெத்தைகள் மற்றும் ஆயத்த ஆடைகள் போன்றவற்றை விற்பனை செய்யும் நேரடி விற்பனையாளர்கள் அவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்று தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.