
பல இரகசிய தகவல்களை இணையத்தில் வெளியிட்டு அமெரிக்காவை உலக நாடுகள் முன் அவமானப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 21 வயதான அமெரிக்கா விமானப்படையின் தேசிய காவலர் ஒருவரை FBI அதிகாரிகள் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், உளவு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குத் தொடரப்போவதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவிப்பதோடு அரசாங்க பாதுகாப்பு தகவல்களை பகிரங்கப்படுத்துவது பாரிய குற்றமாகுமாகும் எனவும் இணையத்தில் வெளியான ரகசிய தகவல்கள் மூலம் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் எதிரி நாடுகளின் போர் தந்திரங்கள் உள்ளிட்ட பல ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.