கிரிஉல்ல பகுதியில் உள்ள கடை ஒன்றில் பட்டாசு விற்பனைக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சாவடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதோடு குறித்த கடைக்கும், அதன் இருபுறமும் இருந்த இரண்டு கடைகளுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
இதன்படி 03 கடைகளும் தீயினால் சேதமடைந்துள்ளதுடன் தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் எவருக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.