தரமான கல்வியை உறுதிப்படுத்தும் வகையில் கல்விக்கான முதலீடுகளை அதிகரிக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, உலக வங்கியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்தோடு, கல்விக்கான மிகவும் பயனுள்ள பொதுச் செலவினங்களுக்காக நாட்டின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் என்ற தலைப்பின் கீழ் உலக வங்கியால் இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டதுடன் அங்கு பேசிய இராஜாங்க அமைச்சர் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு மனித மூலதனத்தின் பங்கு நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளதுஎன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேக்ரோ-பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டின் மூலம் கல்வியானது வேலைவாய்ப்பு, உற்பத்தித்திறன் மற்றும் வருமானம் தனிநபர் நல்வாழ்வில் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இதற்கு மேலதிகமாக, நாடு கல்வியில் சிறந்த செயல்திறனைப் பெற்றுள்ள போதிலும், கோவிட் தொற்றுநோய் மற்றும் மந்தமான பொருளாதார வளர்ச்சி மற்றும் எதிர்கால சவால்களின் எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்ள விரைவான சமூக-பொருளாதார முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.