காலி, தாதெல்ல, வலவ்வத்தையில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் ஒருவர் காயமடைந்து காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, துப்பாக்கியால் சுடப்பட்டதில், காலி, மஹ்முதலி மாவத்தை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதுடன் அவருக்கு அருகில் இருந்த மற்றுமொரு நபரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபருக்கும் கொல்லப்பட்ட நபருக்கும் இடையில் சிறிது காலமாக மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.