-யூ.கே. காலித்தீன் –
ஸீறா பவுண்டேசன் ஸ்ரீ லங்கா அமைப்பினால் வருடா வருடா வர்ய்டம் அமைப்பின் சர்வதேச மற்றும் உள்ளூர் நல்லுலங்களின் நிதியுதவியின் பங்களிப்புடன் நடைபெற்று வரும் நிகழ்வானது தொடர்ந்தேச்சியாக ஒரு தசாப்தத்தினை தாண்டி இம்முறையும் தனது சேவைகளை இறைவனின் திருப்பொருத்ததினை வேண்டி உதவி செய்து வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இக்கால கட்டத்தில் வருமானம் எதுவுமின்றி நிர்க்கதியாகியுள்ள சாய்ந்தமருது – மாளிகைக்காடு பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தின் மற்றும் இமாம்களுக்கு (16) ஆம் திகதியன்று சாய்ந்தமருது ஒஸ்மன் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்வில் பெருமதி வாய்ந்த ஒரு தொகை உலர் உணவு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது அமைப்பின் ஸ்தாபகரும், ஒருங்கிணைப்பா ளருமான யூ.கே. காலித்தீனின் தலைமையிலும், அமைப்பின் பணிப்பாளர் சபையின் சிரேஷ்ட தலைவைர்களில் ஒருவரான அல் ஹாபில் மௌலவி நப்றாஸ் ஹனிபாவின் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்றது.
நிகழ்வில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜம்மிய்யத்துல் உலமாவின் பொருளாலர் அஷ்ஷெய்க் எம்.ஐ. அப்துல் ஜப்பார், கதிப் முஅத்தின் சம்மேளத்தின் பிரதி தலைவர் எம்.எம். நவாஸ், ஸீறா பவுன்டேசன் ஸ்ரீ லங்கா அமைப்பின் பணிப்பாளர் சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களான நில அளவை அத்தியட்சகர் எம்.எஸ்.எம். நஜாக்கத், தொழிநுட்ப உத்தியோகஸ்தர் எஸ்.எம்.நசீர் ஆகியோரோடு கதிப் முஅத்தின் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது வளவாலராக கலந்துகொண்ட அக்கரைப்பற்று அபுவக்கர் ஸித்திக் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எம். கலாமுல்லா (ரஷாதி) கலந்து கொண்டு காலத்தின் தேவையும், முஅத்தீன் கத்தீப் மார்களின் முன்மாதிரியும் எனும் தொனிப் பொருளில் விஷேட சொற்பொழிவினை நிகழ்த்தி கதிப் முஅத்தின் மார்களுக்கு பொதிகளையும் வழங்கி வைத்தமை சிறப்பம்சமாகும்.
இறுதியில் ஒருங்கிணைப்பாளர் யூ.கே.காலித்தினின் நன்றி உரையுடனும் அஷ்ஷெய்க் ஏ.எம். கலாமுல்லா அவர்களின் உருக்காமான துஆப் பிராத்தனையுடனும் முடிவுற்றது.