ஜப்பானில் தாதியர் வேலைகள், இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஹோட்டல் துறையில் வேலை வாய்ப்புகள், ஐரோப்பிய நாடுகளில் தாதியர் வேலை வாய்ப்புகள், சவூதி அரேபியாவில் கட்டுமானத் துறையில் தொழில் வாய்ப்புகள் பாரிய அளவில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு திறக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த வேலைகளுக்கான தேவையை பூர்த்தி செய்ய பயிற்சி பெற்ற தொழிலாளர்களை வழங்க முடியவில்லை என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த வேலை வாய்ப்புகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான பயிற்சி பெற்ற பணியாளர்களை உருவாக்க வேண்டும் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபைக்கு இடையில் இன்று (18) காலை புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது..
அத்தோடு, இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கிய அளவுகோல்களின்படி, இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையானது வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு தேவையான திறன்களைக் கொண்ட நிபுணர்களை பயிற்றுவித்து, அவர்களுக்கு தேசிய தொழில் தகைமை சான்றிதழ் மற்றும் ஏனைய தொழில் சான்றிதழ்களை வழங்கும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதில், தொழிற்பயிற்சி அதிகாரசபையில் பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளத்துடன்
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, தொழிற்பயிற்சிக்கான மாணவர்களை பதிவு செய்தல், அவர்களுக்கு தரப்படுத்தப்பட்ட பயிற்சிகளை வழங்குதல், அவர்களின் பயிற்சியை ஒழுங்குபடுத்துதல் மற்றும் சான்றிதழ் வழங்குதல் ஆகியவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.