அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின்சார சபையின் மறுசீரமைப்புக்கான உத்தேச காலவரையறை மற்றும் வீதி வரைபடம் தொடர்பாக அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் மறுசீரமைப்பு குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி இன்று காலை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் ஒன்றியம், அமைச்சர் மற்றும் குழுவினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், முன்மொழியப்பட்ட செயல்முறைக்கு தங்கள் முழு ஆதரவையும் வழங்குவதாகவும், செயல்முறையை விரைவுபடுத்துமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளதோடு தற்போது பணிபுரியும் அலுவலர்கள் தங்களின் பணிக்கொடை, ஓய்வூதியம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை விரைவுபடுத்துதல் தொடர்பான முன்மொழிவுகளையம் சமர்ப்பித்துள்ளனர்.