மேலும் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, சுங்கத்துறையின் எதிர்பார்க்கப்படும் வருமான இலக்குகளை அடைவதற்கும் இது உதவும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதோடு சுங்கத்தின் வருடத்திற்கான வருமான இலக்குகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்தோடு, முதல் மூன்று மாதங்களுக்கு சுங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள வருமான இலக்கு 270 பில்லியன் ரூபாவாகும் எனவும் ஆனால் அக்காலப்பகுதியில் பெறப்பட்ட வருமானம் எதிர்பார்த்த வருமானத்தை விட 12% குறைவாக இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதோடுபொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமையே இதற்கு முக்கிய காரணம் எனவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
மேலும், 2021ல், 485 பொருட்களும், 2022ல் 750 பொருட்களும் இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை. அத்துடன், மார்ச் மாதத்தில் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமையும் வருமான இலக்குகளை அடைய முடியாமல் போனதற்கான காரணம் எயாரும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனவே, எதிர்வரும் காலங்களில் இது தொடர்பான கட்டுப்பாடுகள் மிகுந்த கவனத்துடன் தளர்த்தப்படும் எனவும் குறிப்பாக மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களம் வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.