மகாவலி பிரதேசங்களின் கனிம வளங்கள் ஊடாக உள்ளுர் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் அந்நியச் செலாவணியை வரவழைத்து, அதனை வினைத்திறனாகப் பயன்படுத்தி மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அதனை முறையாக முகாமைத்துவப்படுத்தவும் விசேட கலந்துரையாடல் நீர்ப்பாசன அமைச்சர் திரு.ரொஷான் ரணசிங்க தலைமையில் நேற்று (18) நீர்ப்பாசன அமைச்சில் இடம்பெற்றது.
மேலும், இக்கலந்துரையாடலில் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் யு.டி.சி. ஜெயலால், இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி பி.கொட்டகம, GSMB தலைவர் எஸ். சந்தீபன், GSMB பணிப்பாளர் நாயகம் அஜித் பிரேம், GSMB நிறைவேற்று அதிகாரி ஜயரத்ன ஹென்நாயக்க மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.