2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் வன ஜீவராசிகளின் தொகையை 30 வீதமாக அதிகரிப்பதற்கு சர்வதேச உடன்படிக்கைகளுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போது எமது நாட்டில் காடுகளின் பரப்பளவு 29.2 வீதமாக உள்ளதாகவும் அதனை 30 வீதமாகக் கொண்டு வருவதற்கு காடுகளின் அளவு மேலும் 08 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, முதல் பார்வையில் இது ஒரு சிறிய இலக்காகத் தோன்றினாலும் எமது நாட்டின் காடுகளின் பரப்பளவு 08 பத்தில் அதிகரிக்க 65,000 ஹெக்டேர் மரங்கள் நடப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர் அமைச்சர், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு நாட்டுக்கான உணவுப்பயிர்களை பயிரிடுவதற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதனால் இம்முறை தேசிய அனுகூலமான நடவு முறைப்படி பழ மரங்களை பல்லாண்டு பயிராக நடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
அத்தோடு, அம்பலாந்தோட்டை ரிதியகம பிரதேசத்தில் நான்கு விவசாயிகள் கடந்த பருவத்தில் இதுவரை நாட்டிலேயே அதிகூடிய நெல் அறுவடையை பதிவு செய்துள்ளதோடு மூன்று பேர் ஒரு ஹெக்டேருக்கு 11,000 கிலோவுக்கு மேல் அரிசியை அறுவடை செய்துள்ளதாகவும் மேலும் ஒரு விவசாயி 9,000 கிலோவுக்கு மேல் அறுவடை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன் மூலம் நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு விவசாயியும் நல்ல விதைகளை விதைத்து, முறையான உரங்களை இட்டு, தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளதுடன் நாட்டில் உணவுப் பயிர்களின் சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைத் தொகையை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது எடுத்துள்ளதாகவும் தடைகளையும் விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் இந்த நாட்டில் விவசாயத்தை உயர்த்தும் வேலைத்திட்டத்தை தொடர்வோம் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.