நீர்ப்பாசன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க இலங்கையின் ரக்பியின் அபிவிருத்திக்காக நியமிக்கப்பட்டுள்ள ஸ்திரப்படுத்தல் குழு தொடர்பான விடையங்களை தெளிவுபடுத்துவதற்காக ஆசிய ரக்பி சம்மேளனத்தின் தலைவர் கைஸ் அல் தலாய் அவர்களை நேற்று (19) துபாயில் உள்ள ஆசிய ரக்பி தலைமையகத்தில் சந்தித்தார்.
இதன்படி, கடந்த வருடங்களாக இலங்கை ரக்பி சம்மேளனம் மேற்கொண்ட பல நடவடிக்கைகள், விளையாட்டின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் அடிப்படை சட்டங்கள் என்பவற்றை அமைச்சர் விளக்கினார்.
அத்தோடு, விளையாட்டுச் சட்டத்தின் உட்பிரிவுகளுக்கு இணங்க விளையாட்டு அமைச்சகத்தின் தலையீடு. எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையாக ஒரு ஸ்திரப்படுத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ தெரிவு வரும் ஆண்டில் நடைபெறும் எனவும் கைஸ் அல் தலயிடம் விளக்கினார்.
மேலும், நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு ஸ்திரப்படுத்தல் குழுவொன்றை நியமிப்பது காலத்துக்கு உரியது எனவும் இலங்கை ரக்பியின் முன்னேற்றத்திற்கு எப்போதும் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் கைஸ் அல் தலாய் தெரிவித்தார்.
இதன்படி, தடையை நீக்குமாறு கடந்த 12ஆம் திகதி விடையங்களை தெளிவுபடுத்தி தாம் அனுப்பிய கடிதத்திற்கு சாதகமாக பதிலளித்தமைக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், இலங்கையின் முன்னேற்றத்திற்காக ஆசிய ரக்பி சம்மேளனத்துடன் இணைந்து செயற்படுவதற்கு முழு ஆதரவையும் வழங்குவதாகவும் தெரிவித்தார்.