பரீட்சை தொடர்பான பணிகளை அத்தியாவசிய சேவையாக நியமிப்பதற்கு தயார் என ஜனாதிபதி தெரிவித்தமைக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று தமது பதிலை வெளிப்படுத்தினர்.
இதன்படி, கல்வியை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கு முன்னர் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாக பல்கலைக்கழக சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் கலாநிதி ஷமா பன்னஹக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கினால், உயர்தர விடைத்தாள்களுக்கான மதிப்பெண்கள் வழங்கும் பணியில் இணைந்து கொள்ளலாம் எனவும் பேராசிரியர் கலாநிதி ஷமா பன்னஹக்க மேலும் தெரிவித்தார்.