நவீன வசதிகளுடன் கூடிய கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரண மில்லவ பிரதேசத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் தற்போதைய நிலைமை மற்றும் தற்போதுள்ள பிரச்சினைகளை ஆராயும் இரண்டாவது கலந்துரையாடல் நேற்று நீதியமைச்சின் கேட்போர் கூடத்தில் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், தற்போதுள்ள நிதி ஒதுக்கீடுகள் மற்றும் இது தொடர்பான ஏனைய நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் திரு.துஷார உபுல்தெனிய, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.