போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் எதிர்பார்த்த மாற்றம் இன்னும் ஏற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
அத்தோடு, நாட்டை கட்டியெழுப்புவதற்கான சரியான திட்டம் அரசாங்கத்திடம் இல்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவு பலப்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.