உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 25 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு ஏனைய அரசியல் கட்சிகளும் ஆதரவளித்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஷனக்யான் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, எதிர்வரும் சில வாரங்களில் உத்தேச சட்டமூலம் தொடர்பில் மக்களுக்கு அறிவிப்பதாக தாம் நம்புவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஷானக்யன் இராசமாணிக்கம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஷானக்யன் இராசமாணிக்கம் மேலும் தெரிவித்துள்ளார்.