சூடானில் தங்கியுள்ள தங்கள் தூதர்கள் மற்றும் குடிமக்களை வெளியேற்ற பல நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இதன்படி, சூடானில் இருந்து பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் அவர்களது பிரஜைகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, அமெரிக்காவும் பிரிட்டனும் சூடானில் இருந்து தங்கள் இராஜதந்திரிகளையும் குடிமக்களையும் முன்னதாகவே திரும்பப் பெற்றன.
மேலும், சூடான் அரச இராணுவம் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற இராணுவ குழுக்களுக்கு இடையே நடந்த கடும் சண்டை காரணமாக பல நாடுகள் சூடானில் இருந்து தங்கள் இராஜதந்திரிகளையும் குடிமக்களையும் திரும்பப் பெற்றுள்ளன.