கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, அவர்களில் மூன்று பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு அம்பலாங்கொட, பொல்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு, இவர் தனது நான்கரை வயது குழந்தையுடன் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறியில் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், விபத்தில் காயமடைந்த சிறு குழந்தை பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மற்றைய விபத்துக்கள் மாவத்தகம, மிரிஹான, கொடிகம்மம் மற்றும் நிட்டம்புவ பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.