
உள்ளூர் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளினுடைய விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் இணங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது மூலப்பொருட்களின் விலை வீழ்ச்சியின் அனுகூலத்தை நுகர்வோருக்கு வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, தற்போது இறக்குமதி தடை பட்டியலில் பைகள் மற்றும் காலணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு பாரிய சந்தை உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்மேலும் தெரிவித்தார்.
எனவே, அவர்களது பொருட்களை குறைந்த விலையில் சந்தைக்கு வெளியிடுமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.