வடகொரியாவின் அணுஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிராக அமெரிக்காவும் தென்கொரியாவும் தனித்துவமான உடன்பாட்டை எட்டியுள்ளன.
இதன்படி, அமெரிக்கா அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை அவ்வப்போது தென் கொரியாவுக்கு அனுப்பவும், அணுசக்தி திட்டமிடல் நடவடிக்கைகளில் தென் கொரியாவை ஈடுபடுத்தவும் வாஷிங்டன் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை. இந்த வாஷிங்டன் பிரகடனம் வடகொரியாவின் தாக்குதல்களுக்கு எதிராக நட்பு நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மேலும், தென் கொரியா அதிபர் யுன் சோ கியோலின் அமெரிக்காப் பயணத்தின் பின்னணியில் இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளதக்க தெரிவிக்கப்படுகின்றது.