கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னகொட அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் காரணமாக முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் அவரது மனைவி அசோகா கரன்னகொட ஆகியோர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அரச சார்பற்ற நிறுவனங்களாலும் சுயாதீன விசாரணைகளாலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளமை பாரதூரமானது எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் அவர் போர்க்காலத்தில் கடற்படைத் தளபதியாக பணியாற்றி காலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.