ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் ஆளில்லா விமானம் தாக்கியதால் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பிராந்திய ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், நேற்று உக்ரைன் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிப்பதோடு குறிப்பிடட சில மாதங்களில் இதுபோன்ற தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை எனவும் தெரிவித்துள்ளன.