உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்த அரச ஊழியர்கள் மீண்டும் பணியைத் தொடர அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதன்படி, தேர்தலில் போட்டியிடும் தொகுதிக்கு வெளியில் பணியைத் தொடர வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மேலும், அரச ஊழியர்களுக்கும் அடிப்படை சம்பளம் வழங்கப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.