2023 ஆம் ஆண்டுக்கான நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு உரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப யூரியா மற்றும் பந்தி உரங்களை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க விவசாய அமைச்சு நேற்று (03) தீர்மானித்துள்ளது.
இதன்படி, தற்போது சில விவசாயிகள் அரசாங்கம் வழங்கும் மானியம் கிடைக்காது என கருதி யூரியா, பூந்தி உரங்களை அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என எண்ணி வருகின்றனர்.
எனினும் விவசாயிகளின் வசதிக்காக அவர்களின் விருப்பத்திற்கேற்ப உரங்களை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தனியாரால் விற்கப்படும் யூரியா உரத்தின் விலை, 50 கிலோ உர மூட்டைக்கு, 9,000 ரூபாயாக குறைந்துள்ளதுடன் உரம் கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதோடு மானியத்தை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
எனவே, விவசாயிகள் யூரியா மற்றும் பூந்தி உரங்களை பொதுத்துறை அல்லது தனியாரிடம் கொள்முதல் செய்தாலும், மானியம் பெறுவதை தடுக்காது குறிப்பிட்ட மானியங்களை விவசாயிகளுக்கு அட்டவணைப்படி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகளுக்கு உரம் வாங்க ஹெக்டேருக்கு 20,000 ரூபாயும், 02 ஹெக்டேருக்கு 40,000 ரூபாயும் மானியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இவ்வருடம் யூரியா உரத்தை கொள்வனவு செய்வதை விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப மேற்கொள்ள முடியும் எனவும் விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.