தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பைச் சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தில் இன்று முதல் கொந்தளிப்பான தன்மை உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மாலை அல்லது இரவு வேளைகளில் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் நிபுணர் சதுஸ்க பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மழை காரணமாக பல முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டிலுள்ள எந்தவொரு ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு எனவும் நாட்டின் பிரதான நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 67 வீதமாக காணப்படுவதாகவும் நீர்ப்பாசன, நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.
மேலும், பல பகுதிகளில் உள்ள கிளை ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கும் போது சுற்றுலா பயணிகள் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.