
ரயில் நிலைய அதிபர்கள் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக மலையக புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதன்படி, ஹட்டன் ரயில் நிலையத்தில் தங்கியிருந்த பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக ஹட்டன் பஸ் நிலையத்தில் பல தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சைக்குச் சிந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, ரயில் நிலைய அதிபர்களின் அடையாள வேலைநிறுத்தம் காரணமாக, மலையக மார்க்கத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
மேலும், இன்று காலை நானுஓயில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த பயணிகள் புகையிரதமும் சரக்கு புகையிரதமும் நானுவாய் புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் எமது செய்தியாளர்மேலு தெரிவித்தார்.