பாடசாலை கட்டிடத்தில் இருந்து குதித்து படுகாயமடைந்த கண்டி பாடசாலை மாணவி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் குறித்த மாணவி மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த தக்க எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், நேற்று பிற்பகல் பாடசாலை கட்டிடம் ஒன்றின் முதல் மாடியில் இருந்து குதித்து காயமடைந்த மாணவி தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.