
தென்கிழக்கின் வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கின்ற காற்றழுத்த தாழ்வு நிலையானது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும் இது மத்திய வங்கக் கடலில் இன்று மாலை புயலாகவும், நாளை புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த புயல் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வங்கதேசம் மற்றும் மியான்மர் கடற்பகுதியை அடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன்காரணமாக தற்போது கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு வருமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது.