பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்படி, கெப்பித்திகொல்லாவ பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட அலியாகட பிரதேசத்தில் முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற கெப்பித்திகொல்லாவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் இருவரை தாக்கி அவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, அலியாக்கட பிரேதேஹா பகுதியைச் சேர்ந்த 21, 23 மற்றும் 24 வயதுடைய மூன்று இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.