பொலவத்த புகையிரத நிலையத்தின் நிலைய அதிபர் உள்ளிட்ட நால்வரை தாக்கிய சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் இருவரை கைது செய்துள்ளனர்.
இதன்படி, சம்பவத்தையடுத்து பொலவத்த புகையிரத நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதோடு வென்னப்புவ வாய்க்கல பிரதேசத்தில் வசிக்கும் 34 மற்றும் 45 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றுமொரு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், புகையிரத நிலையத்திற்க்கு வந்த மூன்று பேர் அங்கு மது அருந்த முயன்றபோது, நிலைய அதிபர் மற்றும் ஊழியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததினைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, சந்தேகநபர்கள் நிலைய அதிபர் மற்றும் ஊழியர்கள் மூவரையும் தாக்கியதுடன், நிலையத்தையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் நிலைய கட்டளைத் தளபதி உள்ளிட்டோர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் வென்னப்புவ பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்தனர்.