புதிய மின்சார சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு இன்று (14) பிற்பகல் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் அதன் குழு உறுப்பினர்களால் நடத்தப்பட்டது.
இதன்படி, புதிய சட்டம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட வரைவு ஆய்வு செய்யப்பட்டு, அதன் நகல் எரிசக்தி நிபுணர்களிடம் வளர்ச்சி முகமைகளால் வழங்கப்பட்டதுடன் நிபுணர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின்படி இறுதி வரைவு தயாரிக்கப்படவுள்ளது.
அத்தோடு, மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்துடன் புதிய மின்சார சட்டத்தையும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.