அரசாங்க ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் கூற்றுப்படி, கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 25 ஆயுர்வேத வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதன்படி, அரசாங்க ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பி.ஹேவாகமகே கூறுகையில், தற்போதுள்ள பிரச்சினைகளை தனது வைத்தியர்களுடன் கலந்துரையாடுவதற்கு அதிகாரிகளிடம் சந்தர்ப்பம் கோரிய போதிலும் இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் ஆயுர்வேத வைத்தியசாலைகளின் நிர்வாகத்தில் பிரச்சினைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.