முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நியமித்திருந்த மூன்று மாகாணங்களின் ஆளுநர்களை இன்று (15) அமுலாகும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கம் செய்துள்ளார்.
இதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களினுடைய ஆளுநர்களே இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை (17) நியமிக்கப்படவுள்ளனர்.
மேலும், வடக்கு மாகாணத்திற்கு ஆளுநரான ஜீவன் தியாகராஜாவும், கிழக்கு மாகாணத்தினுடைய ஆளுநரான அனுராதா யஹம்பத் மற்றும் வடமேல் மாகாணத்திற்குரிய ஆளுநர் அட்மிரல் வசந்த கரன்னாகொட ஆகியோரே இவ்வாறு பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.