இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹன்போல் மற்றும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இலங்கை தாய்லாந்து நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தை மீண்டும் ஏற்படுத்துவது குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, பௌத்த நாடுகள் என்ற வகையில் தாய்லாந்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பௌத்த உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்க்கப்படுவதுடன் தாய்லாந்தின் வணக்கத்திற்குரிய சோம்தேஜ் ஆரியவோங்சோகதையன் தேரரின் 96வது பிறந்தநாள் விழா இலங்கை சங்கத்தினரின் பங்களிப்புடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.